மேற்கு வங்காளத்தில் ரசாயன ஆலையில் பயங்கர தீ - 15 பேர் காயம்

மேற்கு வங்காளத்தில் ரசாயன ஆலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் 15 பேர் காயமடைந்தனர்.

Update: 2019-09-20 19:50 GMT
கொல்கத்தா,

மேற்குவங்காள மாநிலம் கிழக்கு மிட்னாபூர் மாவட்டம் ஹால்டியாவில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் நேற்று காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

இதில் 15 பேர் தீக்காயம் அடைந்தனர். அவர்களில் 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்