முன்னாள் செய்தியாளர் சுப்ரியா ஷிரினேட் காங்கிரஸ் செய்தி தொடர்பாளராக நியமனம்
முன்னாள் செய்தியாளர் சுப்ரியா ஷிரினேட் காங்கிரஸ் செய்தி தொடர்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
புதுடெல்லி,
உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த முன்னாள் காங்கிரஸ் எம்.பி. ஹர்ஷ்வர்தனின் மகள் சுப்ரியா ஷிரினேட். இவர் தொலைக்காட்சி செய்தியாளராக இருந்து பின்னர் அரசியலுக்கு வந்தார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மகராஜ்கஞ்ச் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். சுப்ரியாவை அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளராக கட்சியின் தலைவர் சோனியா காந்தி நியமித்துள்ளார். இந்த தகவலை செய்தி தொடர்பு பொறுப்பாளர் ரந்தீப்சிங் சுர்ஜெவாலா தெரிவித்தார்.
உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த முன்னாள் காங்கிரஸ் எம்.பி. ஹர்ஷ்வர்தனின் மகள் சுப்ரியா ஷிரினேட். இவர் தொலைக்காட்சி செய்தியாளராக இருந்து பின்னர் அரசியலுக்கு வந்தார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மகராஜ்கஞ்ச் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். சுப்ரியாவை அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளராக கட்சியின் தலைவர் சோனியா காந்தி நியமித்துள்ளார். இந்த தகவலை செய்தி தொடர்பு பொறுப்பாளர் ரந்தீப்சிங் சுர்ஜெவாலா தெரிவித்தார்.