உத்தரகாண்டின் முன்னாள் முதல் மந்திரி நெஞ்சு வலியால் மருத்துவமனையில் அனுமதி
உத்தரகாண்டின் முன்னாள் முதல் மந்திரி நெஞ்சு வலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
டேராடூன்,
உத்தரகாண்டில் முதல் மந்திரியாக பதவி வகித்தவர் ஹரீஷ் ராவத். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அவருக்கு திடீரென இன்று நெஞ்சு வலி ஏற்பட்டது.
இதனால் அவர் டேராடூனில் உள்ள மேக்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு எம்.ஆர்.ஐ. ஸ்கேன் மற்றும் பிற பரிசோதனைகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.