சத்தீஷ்காரில் பாதுகாப்பு படையினருடனான மோதலில் நக்சலைட்டு சுட்டு கொலை
சத்தீஷ்காரில் பாதுகாப்பு படையினருடனான மோதலில் நக்சலைட்டு சுட்டு வீழ்த்தப்பட்டார்.
தன்டேவாடா,
சத்தீஷ்காரில் தன்டேவாடா நகரில் மாவட்ட ரிசர்வ் படையை சேர்ந்த பாதுகாப்பு படையினர் நக்சலைட்டு ஒழிப்பு வேட்டையில் ஈடுபட்டனர். இன்று காலை 9 மணியளவில் நடந்த இந்த சண்டையில் நக்சலைட்டு சுட்டு வீழ்த்தப்பட்டார்.
இச்சம்பவத்தில் வீரர் ஒருவருக்கு சிறிய அளவில் காயம் ஏற்பட்டது. இந்த நக்சலைட்டு ஒழிப்பு வேட்டைக்கு முன் மற்றொரு அதிகாரி மாரடைப்பினால் உயிரிழந்து விட்டார்.