சத்தீஷ்காரில் பாதுகாப்பு படையினருடனான மோதலில் நக்சலைட்டு சுட்டு கொலை

சத்தீஷ்காரில் பாதுகாப்பு படையினருடனான மோதலில் நக்சலைட்டு சுட்டு வீழ்த்தப்பட்டார்.

Update: 2019-10-08 08:28 GMT
தன்டேவாடா,

சத்தீஷ்காரில் தன்டேவாடா நகரில் மாவட்ட ரிசர்வ் படையை சேர்ந்த பாதுகாப்பு படையினர் நக்சலைட்டு ஒழிப்பு வேட்டையில் ஈடுபட்டனர்.  இன்று காலை 9 மணியளவில் நடந்த இந்த சண்டையில் நக்சலைட்டு சுட்டு வீழ்த்தப்பட்டார்.

இச்சம்பவத்தில் வீரர் ஒருவருக்கு சிறிய அளவில் காயம் ஏற்பட்டது.  இந்த நக்சலைட்டு ஒழிப்பு வேட்டைக்கு முன் மற்றொரு அதிகாரி மாரடைப்பினால் உயிரிழந்து விட்டார்.

மேலும் செய்திகள்