பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல்; 2 இந்திய வீரர்கள் மரணம்
பாகிஸ்தானின் அத்துமீறிய தாக்குதலில் 2 இந்திய வீரர்கள் மரணம் அடைந்தனர்.
காஷ்மீர்,
ஜம்மு மற்றும் காஷ்மீரின் தங்தார் பிரிவில் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் ஊடுருவல்காரர்களை இந்திய எல்லைக்குள் அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கு பதிலடியாக இந்திய ராணுவம் தாக்குதலில் ஈடுபட்டது. இதில் இந்திய ராணுவ வீரர்கள் 2 பேர் மரணம் அடைந்து உள்ளனர். பாகிஸ்தான் போர்நிறுத்த விதிகளை மீறி தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. இந்திய ராணுவத்தினரும் பதிலுக்கு துப்பாக்கி சண்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.