மராட்டியம், அரியானாவில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

மராட்டியம், அரியானா மாநில சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

Update: 2019-10-24 02:54 GMT
புதுடெல்லி,

மராட்டியம் மற்றும் அரியானா மாநிலத்தில் கடந்த 21-ந்தேதி சட்டசபை தேர்தல் நடைபெற்றது. 288 இடங்களை கொண்ட மராட்டிய சட்டசபைக்கு நடந்த தேர்தலில் 61.13 சதவீத வாக்குகள் பதிவாகின. 90 இடங்களைக் கொண்ட அரியானா சட்டசபைக்கு நடந்த தேர்தலில் 68 சதவீத ஓட்டுகள் பதிவாகின. 

இந்நிலையில் தற்போது மராட்டியம் மற்றும் அரியானா மாநில சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

மேலும் செய்திகள்