காஷ்மீரின் வன பகுதியில் காட்டுத்தீ; நில கண்ணிவெடிகள் வெடித்தன

ஜம்மு மற்றும் காஷ்மீரின் வன பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயால் நில கண்ணிவெடிகள் வெடித்து உள்ளன.

Update: 2019-10-31 10:29 GMT
ஜம்மு,

ஜம்மு மற்றும் காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் அமைந்த எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் வன பகுதியில் நேற்றிரவு திடீரென காட்டுத்தீ ஏற்பட்டது.

இதனை அடுத்து அந்த பகுதியில் உள்ள நில கண்ணிவெடிகள் வெடித்து உள்ளன.  எனினும், இதனால் பொதுமக்களில் யாரும் உயிரிழக்கவோ அல்லது பொருட்சேதமோ ஏற்படவில்லை.

இதுபற்றிய தகவல் அறிந்து வன துறை அதிகாரிகள் மற்றும் ராணுவத்தினர் அந்த பகுதிக்கு சென்று தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

மேலும் செய்திகள்