பீகாரில் ஆளில்லாத வீட்டில் வெடிகுண்டுகள்

பீகாரில் ஆளில்லாத வீட்டில் வெடிகுண்டுகள் இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-11-10 19:41 GMT
பாட்னா,

பீகார் மாநிலம் காஜேகலன் போலீஸ் நிலைய எல்லையில் உள்ள சோட்டி பஜார் பகுதி யில் ஒரு வீட்டில் வசித்துவந்த பிரஜ்கிஷோர் சின்ஹா 6 மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். அவரது பக்கத்து வீட்டில் வசித்து வந்த ஒரு குற்றவாளியை விசாரணைக்காக போலீசார் பிடித்துச் சென்றுள்ளனர்.

சின்ஹா வசித்து வந்த ஆளில்லாத வீட்டில் போலீசார் சோதனை நடத்தியபோது அங்கு 5 வெடிகுண்டுகள் இருந்ததை கண்டுபிடித்தனர். 2 கேன் வெடிகுண்டுகள் மற்றும் 3 நாட்டு வெடிகுண்டுகளை போலீசார் கைப்பற்றினர். அந்த வெடிகுண்டுகளை நிபுணர்கள் செயலிழக்க செய்தனர். போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்