வெளிநாட்டு மது பாட்டில்களுடன் பெண் கைது

பீகார் மாநிலத்தில் வெளிநாட்டு மது பாட்டில்களுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2019-11-17 21:15 GMT
பாட்னா,

பீகார் மாநிலத்தில் மதுவிலக்கு அமலில் உள்ளது. அதையும் மீறி, வைசாலி மாவட்டம் பிஜ்ராலி கிராமத்தில் ஒரு பெண், தனது வீட்டில் மதுபானங்களை பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அந்த பெண்ணின் வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது, 81 வெளிநாட்டு மதுபாட்டில் பெட்டிகள் கைப்பற்றப்பட்டன. சீமா தேவி என்ற அந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்