ஜார்கண்ட் சட்டசபை தேர்தல்: முதல்-மந்திரி ரகுபர் தாசை எதிர்த்து மந்திரி போட்டி

ஜார்கண்ட் சட்டசபை தேர்தலில், முதல்-மந்திரி ரகுபர் தாசை எதிர்த்து மந்திரி போட்டியிட உள்ளார்.

Update: 2019-11-17 21:45 GMT
ஜாம்ஷெட்பூர்,

பாரதீய ஜனதா ஆட்சி நடைபெற்று வரும் ஜார்கண்ட் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் போட்டியிடும் பாரதீய ஜனதா வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகி இருக்கிறது. முதல்-மந்திரி ரகுபர் தாஸ் ஜாம்ஷெட்பூர் கிழக்கு தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். தேர்தலில் போட்டியிட டிக்கெட் கிடைக்காத உணவு மற்றும் சிவில் சப்ளை துறை மந்திரி சர்யு ராய், ஜாம்ஷெட்பூர் கிழக்கு தொகுதியில் முதல்-மந்திரி ரகுபர் தாசை எதிர்த்து சுயேச்சையாக போட்டியிடப்போவதாக அறிவித்து உள்ளார். ஜாம்ஷெட்பூர் மேற்கு தொகுதியிலும் தான் போட்டியிடப் போவதாகவும், ஆனால் ஜாம்ஷெட்பூர் கிழக்கு தொகுதியில்தான் தீவிர கவனம் செலுத்தப்போவதாகவும் அவர் கூறி இருக்கிறார்.

மேலும் செய்திகள்