காஷ்மீரில் சந்தேக நபர்கள் நடமாடுவதாக தகவல்; பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டை

காஷ்மீரில் சந்தேக நபர்கள் நடமாடுவதாக கிடைத்த தகவலையடுத்து பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

Update: 2019-12-02 12:17 GMT
ஜம்மு, 

ஜம்மு காஷ்மீரில் ராம்பன் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியை ஒட்டிய பகுதிகளில் சந்தேக நபர்கள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு உள்ளூர் மக்கள் தகவல் கொடுத்தனர். இந்த தகவலின் பேரில், பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். நாச வேலைகளில் ஈடுபடும் சதித்திட்டத்துடன் பயங்கரவாதிகள் உலவியிருக்கலாம் என்று சந்தேகப்படப்படுகிறது.

மேலும் செய்திகள்