புதுச்சேரியில் கனமழை; காரைக்காலில் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
புதுச்சேரியில் கனமழையை அடுத்து காரைக்காலில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
புதுச்சேரி,
புதுச்சேரியில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில் அங்குள்ள அரசு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், கனமழை காரணமாக காரைக்கால் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
அரசு பள்ளிகளுக்கு ஏற்கெனவே விடுமுறை உள்ள நிலையில் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார்.