டெல்லியில் இன்று அதிகாலையில் தீவிபத்து

டெல்லியின் முண்ட்கா பகுதியில் இன்று அதிகாலை நேரத்தில் தீவிபத்து ஏற்பட்டது.

Update: 2019-12-14 02:11 GMT
டெல்லி,

வடக்கு டெல்லியில் உள்ள முண்ட்கா என்ற பகுதியில் இன்று அதிகாலை நேரத்தில் எதிர்பாராத விதமாக தீவிபத்து ஏற்பட்டது.

இது குறித்து தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து 12 பேர் கொண்ட தீயணைப்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

டெல்லியில் கடந்த 8 ஆம் தேதி அனஜ் மண்டி என்ற பகுதியில் உள்ள 4 மாடி கட்டிதத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி 43 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்