டெல்லியில் உள்ள துணிக்கிடங்கில் பயங்கர தீ விபத்து - 9 பேர் பலி, பலர் காயம்

டெல்லியில் உள்ள துணிக்கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 9 பேர் பலியாகினர்.

Update: 2019-12-23 01:45 GMT
புதுடெல்லி

டெல்லியின் கிராரி என்ற இடத்தில்  உள்ள துணிக்கிடங்கு ஒன்றில் நள்ளிரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில்,  9 பேர் பலியாகினர். பலர் காயம் அடைந்துள்ளனர். 

காயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  தற்போது, தீ முழுவதுமாக அணைக்கப்பட்டுவிட்டதாக முதற்கட்ட தகவல்கள் கூறுகின்றன. தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து இன்னும் முழுமையான தகவல்கள் கிடைக்கவில்லை. 

மேலும் செய்திகள்