அசாமில் கடை ஒன்றில் குண்டுவெடிப்பு; போலீசார் ஆய்வு

அசாமில் தேசிய நெடுஞ்சாலையருகே கடை ஒன்றில் இன்று காலை திடீரென குண்டுவெடிப்பு நடந்துள்ளது.

Update: 2020-01-26 03:26 GMT
திப்ரூகார்,

அசாமில் திப்ரூகார் நகரில் கிரகாம் பஜார் பகுதியில் தேசிய நெடுஞ்சாலை எண் 37 அருகே இன்று காலை திடீரென கடை ஒன்றில் குண்டுவெடிப்பு நடந்துள்ளது.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் போலீசார் மற்றும் பிற அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு உடனடியாக சென்றுள்ளனர்.  அசாம் டி.ஜி.பி. ஜோதி மகந்த் செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, திப்ரூகாரில் குண்டுவெடிப்பு நடந்துள்ளது பற்றி எங்களுக்கு தகவல் கிடைத்தது.

விசாரணை தொடங்கப்பட்டு உள்ளது.  இச்சம்பவத்தில் ஈடுபட்டோர் யார் என்பது பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர் என கூறியுள்ளார்.  நாட்டில் 71வது குடியரசு தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் அசாமில் ஏற்பட்டுள்ள குண்டுவெடிப்பு சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்