மராட்டியத்தில் பஸ்-ஆட்டோ மோதி கிணற்றுக்குள் விழுந்ததில் 20 பேர் பலி
மராட்டியத்தில் பஸ் மற்றும் ஆட்டோ ரிக்ஷா மோதி கிணற்றுக்குள் விழுந்ததில் 20 பேர் பலியாகி உள்ளனர்.
நாசிக்,
மராட்டியத்தின் நாசிக் நகரில் தியோலா பகுதியில் பேருந்து ஒன்றும் ஆட்டோ ரிக்ஷாவும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்திற்குள்ளானது. மோதிய வேகத்தில் கிணறு ஒன்றில் அவை விழுந்தன.
இந்த சம்பவத்தில் 20 பேர் பலியானார்கள். 18 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு உள்ளனர். அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகின்றன. பலி எண்ணிக்கை உயர கூடும் என கூறப்படுகிறது.