நாடாளுமன்றத்துக்கு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் வருகை
நாடாளுமன்றத்தில் 2020-2021 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் இன்று காலை 11 மணியளவில் தாக்கல் செய்யப்படுகிறது.
புதுடெல்லி,
2020 - 2021 ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை 11 மணிக்கு தாக்கல் செய்கிறார். பட்ஜெட் தாக்கல் செய்வதற்காக நாடாளுமன்றத்திற்கு நிதி அமைச்சர் வருகை தந்தார். கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் அரசு சின்னம் பொறிக்கப்பட்ட பையில், பட்ஜெட் ஆவணங்களை எடுத்து வந்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்குவதற்காக பட்ஜெட் ஆவணங்களின் நகல்கள் நாடாளுமன்ற வளாகத்திற்கு எடுத்து வரப்பட்டன. மோப்ப நாய்கள் சோதனைகள் செய்த பிறகு நகல்கள் நாடாளுமன்றம் எடுத்துச்செல்லப்பட்டன.
பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் நாடாளுமன்றத்திற்கு சுமார் 10.20 மணியளவில் வருகை தந்தனர்.