பஞ்சாபில் 3 அடுக்கு கட்டிடம் இடிந்தது; பலர் சிக்கி இருக்க கூடும் என அச்சம்

பஞ்சாபில் 3 அடுக்கு கட்டிடம் இடிந்து விழுந்ததில் பலர் சிக்கி இருக்க கூடும் என அஞ்சப்படுகிறது.

Update: 2020-02-08 10:37 GMT
மொஹாலி,

பஞ்சாபின் மொஹாலி நகரில் கரார்-லேண்ட்ரான் சாலையில் 3 அடுக்கு கட்டிடம் ஒன்று அமைந்திருந்தது.  இந்நிலையில், அதன் அடிப்பகுதியில் பொக்லைன் இயந்திரம் கொண்டு தோண்டும் பணி இன்று நடைபெற்று வந்துள்ளது.

இதில் கட்டிடம் திடீரென இடிந்து விழுந்துள்ளது.  கட்டிடம் இடிந்த பகுதியில் பலர் சிக்கி இருக்க கூடும் என அஞ்சப்படுகிறது.  தரைமட்டத்திற்கு கட்டிடம் இடிந்து போயுள்ளது.

இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் மற்றும் தேசிய பேரிடர் பொறுப்பு படையினர், உள்ளூர் மக்களின் உதவியுடன் மீட்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

மேலும் செய்திகள்