காஷ்மீரில் பள்ளத்தாக்கிற்குள் பாய்ந்த கார்; 9 பேர் பலி

ஜம்மு மற்றும் காஷ்மீரில் கார் ஒன்று பள்ளத்தாக்கிற்குள் கவிழ்ந்ததில் 9 பேர் பலியாகினர்.

Update: 2020-02-22 16:06 GMT
ஜம்மு,

ஜம்மு மற்றும் காஷ்மீரின் கத்துவா நகரில் மல்ஹார் பகுதியில் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது.  அது திடீரென பள்ளத்தாக்கு ஒன்றில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் 9 பேர் பலியாகி உள்ளனர்.  5 பேர் காயமடைந்து உள்ளனர்.  அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.  இதுபற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்