மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு - மத்திய அமைச்சரவை ஒப்புதல்
மத்திய அரசு ஊழியர்களுக்கு 4 சதவிகித அகவிலைப்படி உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
புதுடெல்லி
பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 4 சதவீதம் உயர்த்த ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு 17 சதவீதம் அகவிலைப்படி வழங்கப்பட்டு வருகிறது. அகவிலைப்படி 4 சதவீதம் உயரத்தப்படுவதன் மூலம் மத்திய அரசு ஊழியர்களுக்கு 21 சதவீதம் அகவிலைப்படி கிடைக்கும்.