இ-பாஸ் முறையால் குழப்பம்: கொடைக்கானலில் குறைந்த சுற்றுலா பயணிகள் வருகை

கொடைக்கானலுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை பெருமளவு குறைந்துள்ளது.

Update: 2024-05-05 09:55 GMT

கொடைக்கானல்,

சென்னை ஐகோர்ட்டு உத்தரவுப்படி, வருகிற 7-ந்தேதி முதல் கொடைக்கானலுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளுக்கு இ-பாஸ் முறை அமல்படுத்தப்பட உள்ளது. இதற்கு கொடைக்கானல்வாசிகள் மட்டுமின்றி, பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

கோடை விடுமுறை தொடங்கிய நாளில் இருந்து கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்துகொண்டிருந்தனர். இந்த நிலையில், இ-பாஸ் குழப்பத்தால் விடுமுறை தினமான இன்று கொடைக்கானலுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை பெருமளவு குறைந்துள்ளது.

 

Tags:    

மேலும் செய்திகள்