ராஜஸ்தானில் கொரோனாவில் இருந்து மீண்ட இத்தாலி முதியவர் சாவு

ராஜஸ்தானில் கொரோனாவில் இருந்து மீண்ட இத்தாலி முதியவர் உயிரிழந்தார்.

Update: 2020-03-20 20:18 GMT
ஜெய்ப்பூர்,

இத்தாலியில் இருந்து ராஜஸ்தானுக்கு சுற்றுலா வந்த 69 முதியவர் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகி இருந்தார். இதனால் அவர் ஜெய்ப்பூரில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரியில் சிகிச்சை பெற்றார். இதில் அவருக்கு கொரோனா தொற்று குணமடைந்தது.

இதயம் மற்றும் நுரையீரல் நோயாளியான இவர், அரசு மருத்துவக்கல்லூரியில் இருந்து தனியார் ஆஸ்பத்திரிக்கு செல்ல விரும்பினார். இதனால் அவர் நேற்று முன்தினம் காலையில் அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரி ஒன்றுக்கு மாற்றப்பட்டார்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த அவருக்கு நேற்று அதிகாலையில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

ஜெய்ப்பூர் அரசு மருத்துவக்கல்லூரியில் சிகிச்சை பெற்றதில் அவர் கொரோனாவில் இருந்து மீண்டு வெளியில் செல்லும் தகுதியுடன் இருந்ததாக கல்லூரி முதல்வர் சுதிர் பண்டாரி தெரிவித்தார்.

மேலும் செய்திகள்