இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 370 ஆக உயர்வு

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 370 ஆக உயர்ந்துள்ளது.

Update: 2020-03-22 09:44 GMT
புதுடெல்லி,

உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலாக இருந்து வரும் கொரோனா வைரஸ் தொற்றுநோயானது இந்தியாவில் தொடர்ந்து தீவிர பாதிப்பு ஏற்படுத்தி வருகிறது.  இதனால் நாள்தோறும் இதன் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.

இந்தியாவில் இன்று மதியம் நிலவரப்படி கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 341 ஆக அதிகரித்து இருந்தது.

இதுதொடர்பாக, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா பாதிப்பு ஏற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்து வருகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 370 ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

மேலும் செய்திகள்