ஏழைகளுக்கு சமைத்து போட ஜார்கண்டில் 350 கிச்சடி மையங்கள்

ஏழைகளுக்கு சமைத்து போட ஜார்கண்டில் 350 கிச்சடி மையங்கள் திறக்கப்பட உள்ளன.

Update: 2020-03-23 21:49 GMT
ராஞ்சி,

ஜார்கண்ட் மாநிலத்தில், 31-ந் தேதிவரை தனிமைப்படுத்தும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த காலகட்டத்தில், உணவுக்கு வழி இல்லாதவர்களுக்கு உணவு சமைத்து போடுவதற்காக, 350-க்கும் மேற்பட்ட கிச்சடி மையங்களை திறக்கப் போவதாக மாநில அரசு அறிவித்துள்ளது.

அத்துடன், 377 அரிசி-பருப்பு மையங்கள் ஏற்கனவே இயங்கி வருவதாக கூறியுள்ளது. வேலை இழந்த அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு உதவ நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் ஜார்கண்ட் மாநில அரசு கூறியுள்ளது.

மேலும் செய்திகள்