விவசாயிகளுக்கு கிசான் யோஜனா திட்டத்தின் கீழ் உடனடியாக 2000 ரூபாய் வழங்கப்படும் : நிர்மலா சீதாராமன்

மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்களுக்கு ரூ.50 லட்சத்தில் மருத்துவ காப்பீடு செய்யப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

Update: 2020-03-26 08:24 GMT
புதுடெல்லி,

நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- “ 

*ஊரடங்கு காலத்தில் ஏழைகள் யாரும் உணவில்லாமல் தவிக்கக் கூடாது என்பதில் அரசு உறுதியாக உள்ளது.
* மருத்துவர்கள்,செவிலியர்கள், தூய்மை பணியாளர்களுக்கு ரூ.50 லட்சத்தில் காப்பீடு செய்யப்படும். 
*வீடுகள் தோறும் கூடுதலாக 3 மாதங்களுக்கு ஒரு கிலோ பருப்பு வழங்கப்படும். 

*80 கோடி ஏழை மக்களுக்கு 5 கிலோ அரிசியுடன், அடுத்த 3 மாதங்களுக்கு கூடுதலாக 5 கிலோ கோதுமை வழங்கப்படும்.
* 100 நாள் வேலை திட்டத்தின் கூடுதலாக ரூ.2 ஆயிரம் வழங்கப்படும். 
*முறைசாரா தொழிலாளர்களுக்காக ரூ.2 ஆயிரம் கூடுதலாக வழங்கப்படும் 

*விவசாயிகள், விதவைகள், ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு ஜன்தன் யோஜனா திட்டத்தின் கீழ் உதவிகள் வழங்கப்படும்
* விவசாயிகளுக்கு கிசான் யோஜனா திட்டத்தின் கீழ் உடனடியாக 2000 ரூபாய் வழங்கப்படும்
* 8.69 கோடி விவசாயிகள் இதன் மூலம் நேரடியாக பயன்பெறுவர்

*முறைசாரா தொழிலாளர்களுக்கு, 2 ஆயிரம் ரூபாய் கூடுதலாக வழங்கப்படும்
* இதன் மூலம் 5 கோடி குடும்பங்கள் நேரடியாக பயன்பெறுவர்
* 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட  சம்பளம் 182 ரூபாயிலிருந்து ரூ.202 ஆக உயர்வு
*உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் 3 மாதங்களுக்கு இலவசமாக சிலிண்டர் வழங்கப்படும் .
*80 கோடி ஏழைகளுக்கு 5 கிலோ அரிசி, 5 கிலோ கோதுமை 3 மாத்துக்கு கூடுதலாக வழங்கப்படும் 
*ஒரு கிலோ பருப்பும் இலவசமாக வழங்கப்படும்

*வருங்கால வைப்பு நிதியின் 75 சதவீதம் அல்லது 3 மாத சம்பளத்தில், எது குறைவோ அதை முன் பணமாக எடுத்துக்கொள்ளலாம்.

மேலும் செய்திகள்