இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 4,421 ஆக உயர்வு
இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 4,421 ஆக அதிகரித்துள்ளது.
புதுடெல்லி
இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 4,421 ஆக அதிகரித்துள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் படி, இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 4,281-ல் இருந்து 4,421 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 114 ஆக உயர்ந்துள்ளது. குணம் அடைந்தோர் எண்ணிக்கை 326 ஆக உயர்ந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.