பாகிஸ்தான் நாட்டவர் பஞ்சாபில் கைது
இந்திய எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் நாட்டவர் எல்லை பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புதுடெல்லி,
பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூர் மாவட்டத்தில் உள்ள சர்வதேச எல்லைக்கட்டுப்பாடு கோடு வழியாக பாகிஸ்தானில் இருந்து வாலிபர் ஒருவர் இந்திய எல்லைக்குள் நுழைந்ததாகவும், இதனை பார்த்த எல்லை பாதுகாப்பு படையினர் அவரை மடக்கிப் பிடித்து கைது செய்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விசாரணையில், அந்த நபர் பாகிஸ்தானின் கசூர் மாவட்டத்தில் உள்ள பிண்டி கிராமத்தைச் சேர்ந்த ஷாபாஸ் (வயது 30) என்பது தெரியவந்தது. அவரிடம் இருந்து ஆறு முக கவசங்கள், சில காலி பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் தீப்பெட்டி போன்றவை பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.