டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 425 பேருக்கு கொரோனா தொற்று

டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 425 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2020-05-15 12:34 GMT
புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இன்றோடு 52 நாட்கள் ஆகியுள்ள நிலையிலும், நாட்டில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை  81970 ஆக உள்ளது. 
 பலியானவர்கள் எண்ணிக்கை 2,649 ஆக உயர்ந்துள்ளது.

 தலைநகர் டெல்லியில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 425 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக டெல்லி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. டெல்லியில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,895ஆக உயர்ந்துள்ளது. 

அவர்களில் 5,254 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர். டெல்லியில் கொரோனா பாதிப்பால் இதுவரை  123 பேர் பலியாகியுள்ளனர்.  எனினும், டெல்லியில்  கொரோனாவுக்கு இன்று எந்தவித உயிரிழப்பும் ஏற்படவில்லை  என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்