தனது குடும்பத்தினர் 4 பேர் மட்டுமே பயணிக்க ரூ.20 லட்சத்திற்கு விமானத்தை வாடகைக்கு எடுத்த தொழில் அதிபர்!

180 இருக்கைகள் கொண்ட விமானத்தை தனது குடும்பத்தினர் 4 பேர் மட்டுமே பயணிக்க ரூ.20 லட்சத்திற்கு தொழில் அதிபர் வாடகைக்கு எடுத்துள்ளார்.

Update: 2020-05-28 13:04 GMT
புதுடெல்லி,

கொரோனா வைரஸ் ஊர்டங்கு  காரணமாக கிட்டத்தட்ட இரண்டு மாத இடைவெளிக்குப் பிறகு, உள்நாட்டு வணிக விமான சேவைகள் திங்கள்கிழமை முதல் மீண்டும் தொடங்கப்பட்டன.

மத்திய பிரதேசம் போபாலைச் சேர்ந்த  மதுபான தொழிற்சாலை அதிபரின் குடும்பம் போபாலில் சிக்கிகொண்டது.   கடந்த இரண்டு மாதங்களாக போபாலில் சிக்கிக்கொண்டிருந்த தனது மகள் மற்றும் அவரது இரண்டு குழந்தைகள் மற்றும்  பணிப்பெண் ஆகிய 4 பேரை டெல்லி அழைத்து வர ஏர்பஸ்-ஏ 320 விமானத்தை வாடகைக்கு எடுத்தார். 180 இருக்கைகள் கொண்ட இந்த விமானத்தின் வாடகை  சுமார் ரூ .20 லட்சம் என்று விமான நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

விமானம் டெல்லியில் இருந்து போபால்  சென்று, பின்னர் அங்கிருந்து மீண்டும் டெல்லிக்கு திரும்பி வந்துள்ளது.

விமானம் திங்கள்கிழமை டெல்லியில் இருந்து போபாலுக்கு நான்கு பயணிகள் மற்றும் விமான குழுவினருடன்   சென்றது.மற்றவிவரங்களை விமான நிலைய அதிகாரிகள் வெளியிட வில்லை.

மேலும் செய்திகள்