ஒரே நாளில் 494 விமானங்களில் 38 ஆயிரம் பேர் பயணம்
ஒரே நாளில் 494 விமானங்களில் 38 ஆயிரம் பேர் பயணம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
உள்நாட்டு விமான சேவை கடந்த 25-ந் தேதி தொடங்கியது. இந்நிலையில், நேற்று முன்தினம் (வியாழக்கிழமை) ஒரே நாளில் 494 விமானங்கள் இயக்கப்பட்டன. அவற்றில் 38 ஆயிரத்து 78 பயணிகள் பயணம் செய்துள்ளனர். இத்தகவலை மத்திய சிவில் விமான போக்குவரத்து மந்திரி ஹர்தீப்சிங் பூரி தெரிவித்தார். இதுவரை உள்நாட்டு விமானங்களில் பயணம் செய்த 16 பேருக்கு கொரோனா தாக்கி உள்ளது.