அரியானாவில் தொடரும் நிலநடுக்கம்; பொதுமக்கள் அதிர்ச்சி

அரியானாவில் கடந்த 3 நாட்களில் 2வது முறையாக இன்று லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது.

Update: 2020-06-26 13:55 GMT
சண்டிகர்,

அரியானாவின் ரோக்தக் நகர் அருகே இன்று பிற்பகல் 3.32 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.  இது ரிக்டர் அளவில் 2.8 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்து உள்ளது.

அரியானாவின் ரோக்தக் நகர் அருகே கடந்த 24ந்தேதி மதியம் 12.58 மணியளவில் இதேபோன்ற லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.  இது ரிக்டர் அளவில் 2.8 ஆக பதிவாகி இருந்தது.  கடந்த சில நாட்களாக நாட்டின் வட பகுதிகளில் தொடர்ச்சியாக நிலநடுக்கங்கள் உணரப்பட்டு வருகின்றன.

மராட்டியத்தில் அகோலா நகரில் இருந்து தெற்கே 129 கி.மீ. தொலைவில் கடந்த 23ந்தேதி மாலை 5.28 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.  இது ரிக்டரில் 3.3 அளவில் பதிவானது.

இதேபோன்று, வடகிழக்கு பகுதிகளான மிசோரம் மற்றும் ஒடிசாவில் கடந்த 3 நாட்களுக்கு முன் மித அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.  கடந்த 18ந்தேதி மற்றும் கடந்த ஞாயிறு அன்றும் மிசோரமில் நிலநடுக்கங்கள் உணரப்பட்டன.  இதேபோன்று, சத்தீஷ்காரில் கடந்த 3 நாட்களுக்கு முன் இரவில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது.  இது ரிக்டரில் 3.6 ஆக பதிவாகி இருந்தது.

அரியானாவில் கடந்த 3 நாட்களில் 2வது முறையாக இன்று லேசான நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது.  இதனால் அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்களிடையே அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்