கொரோனாவின் கோரப்பிடியில் மராட்டியம்: இன்று புதிதாக 5,318 பேருக்கு தொற்று உறுதி

மராட்டியத்தில் இன்று புதிதாக 5,318 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Update: 2020-06-27 16:26 GMT
மும்பை,

மராட்டியத்தை ஆட்கொல்லி கொரோனா வைரஸ் புரட்டி போட்டு உள்ளது. இங்கு நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையும் பலியானவர்களின் எண்ணிக்கையும் மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது. 

இந்நிலையில் இன்று ஒரேநாளில் இதுவரை இல்லாத புதிய உச்சமாக 5,318 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,59,133 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 167 பேர் நோய் தொற்றால் உயிரிழந்துள்ளனர். 

மாநிலத்தில் இன்று ஒரேநாளில் 4,430 பேர் கொரோனா பாதிப்பில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் மாநிலத்தில் வைரஸ்பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 84,245 ஆக உயர்ந்துள்ளது என்று அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் இதுவரை 67,600 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் செய்திகள்