ரோந்து சென்ற மத்திய பாதுகாப்பு படைவீரர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் 3 வீரர்கள் காயம்

ரோந்து சென்ற மத்திய பாதுகாப்பு படைவீரர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர் இதில் 3 வீரர்கள் காயம் அடைந்தனர்.

Update: 2020-07-01 03:15 GMT
ஸ்ரீநகர்

ஜம்மு-காஷ்மீரின் சோபூர் பகுதியில் இன்று காலை ரோந்து சென்ற மத்திய பாதுகாப்பு படைவீரர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 3 வீரர்கள் காயம்  அடைந்தனர். காயமடைந்த வீரர்களில் இருவரின் நிலமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் மொதுமக்களில் ஒருவரும் காயமடைந்தார். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

மேலும் செய்திகள்