ஜம்மு காஷ்மீர்: எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல்

ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது.

Update: 2020-07-08 01:31 GMT
ஸ்ரீநகர்,

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி எல்லையில் தாக்குதல் நடத்துவதை பாகிஸ்தான் வாடிக்கையாக கொண்டுள்ளது. பாகிஸ்தானின் இத்தகைய அத்துமீறலுக்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது.

இந்த நிலையில், பூன்ச் மாவட்டத்தில் உள்ள மெந்த்ஹர் செக்டாரில்  பாகிஸ்தான்  ராணுவம் அத்துமீறி தாக்க்குதல் நடத்தியது. பாகிஸ்தானின் அத்துமீறலுக்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்தது. அதிகாலை 2 மணிக்கு தொடங்கிய இந்த மோதல் சுமார்  45 நிமிடம் வரை நீடித்ததாக ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

மேலும் செய்திகள்