மிசோரமில் நிலநடுக்கம்; ரிக்டரில் 4.3 ஆக பதிவு
மிசோரமில் இன்று மதியம் நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது.
சாம்பை,
மிசோரமின் சாம்பை நகரில் இருந்து தென்மேற்கே 23 கி.மீ. தொலைவில் இன்று மதியம் 2.28 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது.
இது ரிக்டரில் 4.3 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்து உள்ளது. எனினும், பொருளிழப்புகள் மற்றும் பிற விவரங்கள் எதுவும் உடனடியாக வெளியாவில்லை.