தாராவியில் இன்று புதிதாக 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
தாராவியில் இன்று புதிதாக 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மும்பை,
தாராவியில் ஆட்கொல்லி கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
நேற்று வரை தாராவியில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2,370 ஆக இருந்தது.
இந்நிலையில் இன்று தாராவியில் புதிதாக 5 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் அங்கு பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2 ஆயிரத்து 375 ஆக அதிகரித்து உள்ளது. இதில் 2 ஆயிரத்து 16 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது வரை 113 பேர் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.