மத்திய பிரதேசத்தில் இன்று 632 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

மத்திய பிரதேச மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 632 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2020-07-23 15:21 GMT
போபால்,

மத்திய பிரதேச மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, மாநிலம் முழுவதும் இன்று 632 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 25,474 ஆக அதிகரித்துள்ளது.

இன்று 10 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்ததையடுத்து, மத்திய பிரதேசத்தில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 780 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 7,335 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக மத்திய பிரதேச மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்