இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 18 லட்சத்தை தாண்டியது

இந்தியாவில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 2 கோடியை தாண்டியுள்ளது.

Update: 2020-08-03 04:20 GMT
புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா வைரஸ் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. இன்று காலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின் படி இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 18 லட்சத்தை தாண்டியுள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 52,972 -பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 771-பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை  18,03,696  ஆக உள்ளது.

அதேபோல், உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 38,135 ஆக உள்ளது.  கொரோனா தொற்று பாதிப்புடன் இன்றைய நிலவரப்படி 5,79,357 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 1,186,203-பேர் தொற்றில் இருந்து இதுவரை குணமடைந்துள்ளனர்.  

இந்தியாவில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 2 கோடியை தாண்டியுள்ளது. ஆகஸ்ட் 2 ஆம் தேதி நிலவரப்படி இந்தியாவில்  2,02,02,858- மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. நேற்று ஒருநாளில் மட்டும்  3,81,027- மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதாக இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

மேலும் செய்திகள்