மராட்டிய மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 231 போலீசாருக்கு கொரோனா தொற்று

மராட்டிய மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 231 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2020-08-04 08:18 GMT
மும்பை,
 
நாட்டிலேயே கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள மாநிலமான மராட்டியத்தில், முன்கள பணியாளர்களான போலீசாரும் அதிக அளவில்  தொற்று பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். மராட்டியத்தில்  இன்று காலை நிலவரப்படி 231  போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்த  போலீசாரின்   எண்ணிக்கை 7,950-ஆக உள்ளது. மேலும் 1,877-பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா பாதிப்பால் 3 போலீசார் உயிரிழந்ததால்,  கொரோனா தொற்றால் உயிரிழந்த  போலீசார் எண்ணிக்கை 107-ஆக அதிகரித்துள்ளது.

மேலும் செய்திகள்