விழாக்கோலம் பூண்டுள்ள அயோத்தி:பூமி பூஜை நடைபெறும் இடத்திற்கு யோகி ஆதித்யநாத், உமா பாரதி வருகை

அயோத்தியில் ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டும் இடத்திற்கு உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் வருகை தந்தனர்.

Update: 2020-08-05 05:41 GMT
அயோத்தி,

அயோத்தியில் ராம ஜென்ம பூமியில் ராமர் கோவிலுக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெறுகிறது. இதற்காக அயோத்தி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொள்வதற்காக அயோத்திக்கு பிரதமர் மோடி, டெல்லியில் இருந்து புறப்பட்டார்.  

பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு அயோத்தி முழுவதும் உச்ச கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அடிக்கல் நாட்டு விழா நடைபெறும் இடத்திற்கு உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆளுநர் ஆனந்திபென் படேல், உமாபாரதி ஆகியோர் வருகை தந்துள்ளனர்.

முன்னதாக, அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டேன் என உமாபாரதி கூறியிருந்த நிலையில், அறக்கட்டளை நிர்வாகிகள் கோரிக்கையை ஏற்று விழாவில் கலந்து கொள்ள இருப்பதாக இன்று காலை தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்