புதிய கல்வி கொள்கை கருத்தரங்கில் பிரதமர் மோடி இன்று உரை

புதிய கல்வி கொள்கை கருத்தரங்கில் பிரதமர் மோடி இன்று உரை ஆற்றுகிறார்.

Update: 2020-08-07 00:00 GMT
புதுடெல்லி, 

புதிய தேசிய கல்வி கொள்கை பற்றிய கருத்தரங்கு இன்று நடைபெறுகிறது. ‘புதிய கல்வி கொள்கையின் கீழ் உயர் கல்வியில் புதிய சீர்திருத்தங்கள்‘ என்ற தலைப்பில் இந்த கருத்தரங்கு நடக்கிறது. மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகமும், பல்கலைக்கழக மானியக்குழுவும் இதை நடத்துகின்றன.

பிரதமர் மோடி கலந்து கொண்டு, கருத்தரங்கில் தொடக்க உரை ஆற்றுகிறார். புதிய கல்வி கொள்கையின் பல்வேறு அம்சங்கள் குறித்து தனித்தனி அமர்வுகள் இதில் நடக்கின்றன.

மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி ரமேஷ் பொக்ரியால், இணை மந்திரி சஞ்சய் தோட்ரே, புதிய கல்வி கொள்கை வரைவு குழுவின் தலைவர், உறுப்பினர்கள், பல்வேறு பல்கலைக்கழக துணை வேந்தர்கள், கல்லூரி முதல்வர்கள், விஞ்ஞானிகள் ஆகியோரும் கலந்துகொள்கிறார்கள்.

மேலும் செய்திகள்