அசாமில் கடந்த 24 மணி நேரத்தில் 2,218 பேருக்கு கொரோனா தொற்று
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமிலும் கொரோனா தொற்று பரவல் அதிகமாக உள்ளது
கவுகாத்தி,
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமிலும் கொரோனா தொற்று பரவல் அதிகமாக உள்ளது கடந்த 24 மணி நேரத்தில் 2,218 பேருக்கு அம்மாநிலத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம், அந்த மாநிலத்தில் இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 57,741 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து இதுவரை 38,809 பேர் மீண்டுள்ள நிலையில் 18,762 பேர் தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பு காரணமாக அம்மாநிலத்தில் இதுவரை 140- பேர் உயிரிழந்துள்ளனர்.