மராட்டியத்தில் இன்று ஒரே நாளில் 13,348 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்

மராட்டியத்தில் இன்று ஒரே நாளில் 13,348 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்

Update: 2020-08-09 16:27 GMT
மும்பை,

மராட்டிய மாநிலத்தை ஆட்கொல்லி கொரோனா வைரஸ் புரட்டிப்போட்டு உள்ளது. அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து உள்ள போதும் பாதித்தவர்கள், பலியானவர்கள் எண்ணிக்கை அசுர வேகத்தில் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி மராட்டியத்தில் இன்று ஒரே நாளில் 13,348 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் மாநிலத்தில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,51,710 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் மாநிலத்தில் இன்று ஒரேநாளில் 12,248 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தொற்று பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5,15,332 ஆக உள்ளது.  இன்று மேலும் 390 பேர் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17,757 ஆக உயர்ந்துள்ளது

மராட்டியத்தில் தற்போது வரை 1,45,558 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் செய்திகள்