தாராவியில் இன்று மேலும் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
தாராவியில் இன்று மேலும் 9 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மும்பை,
தாராவியை அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸ் தற்போது அங்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று தாராவியில் புதிதாக 9 பேருக்கு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2 ஆயிரத்து 626 ஆக அதிகரித்து உள்ளது.
தாராவியில் இதுவரை 2,289 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதில் 79 பேர் மட்டுமே மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.