கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,212 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,212 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2020-08-13 05:30 GMT
திருவனந்தபுரம்,

கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறித்த தகவலை முதல்வர் பின்ராயி விஜயன் வெளியிட்டுள்ளார். அதன்படி கடந்த 24 மணி நேரத்தில் கேரளாவில் 1,212 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் தற்போது 13,045 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், கொரோனாவில் இருந்து 24,926 பேர் குணமடைந்துள்ளனர். கேரளாவில் கொரோனாவுக்கு மேலும் 5 பேர் பலியான நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 126 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் செய்திகள்