இஸ்ரோ தனியார்மயமாக்கப்படாது: கே.சிவன் விளக்கம்
இஸ்ரோ தனியார்மயமாக்கப்படாது என்று அதன் தலைவர் கே.சிவன் விளக்கம் அளித்துள்ளார்.
ஸ்ரீஹரிகோட்டா,
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான (இஸ்ரோ) தனியார்மயமாக்கப்படாது என்று அந்த மையத்தின் தலைவர் கே. சிவன் தெரிவித்துள்ளார். இது குறித்து சிவன் கூறியதாவது: “விண்வெளித் துறையில் அரசு அறிமுகப்படுத்தியுள்ள சீர்திருத்தங்கள், நிச்சயம் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். இஸ்ரோவை தனியார்மயமாக்கப்படும் என்ற தவறான புரிதல்கள் உள்ளன.
இஸ்ரோ தனியார்மயமாக்கப்படாது. சீர்திருத்தங்களின் முழு செயல்பாடும், தனிநபர்கள் விண்வெளித் துறை சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளவே உதவுகிறது. இஸ்ரோ தனியார் மயமாக்கப்படாது என்று நான் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி கூறுகிறேன். இஸ்ரோ தனது வளங்களை சிறப்பாக பயன்படுத்தவே இந்த சீர்திருத்தங்கள் உதவும்” என்றார்.