டெல்லியில் மெட்ரோ ரெயில் சேவையை படிப்படியாக துவங்க வேண்டும்: மத்திய அரசுக்கு கெஜ்ரிவால் கோரிக்கை

டெல்லியில் மெட்ரோ ரெயில் சேவையை படிப்படியாக துவங்க வேண்டும் என கெஜ்ரிவால் கோரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2020-08-23 16:20 GMT
புதுடெல்லி,

டெல்லியில் கொரோனா தொற்று பரவல் வேகம் சற்று தணிந்துள்ளது. இந்த நிலையில், டெல்லியில்  மெட்ரோ ரெயில் சேவையை படிப்படியாக துவங்க வேண்டும் என்று கெஜ்ரிவால் கோரிக்கை விடுத்துள்ளார். 

இது தொடர்பாக  கெஜ்ரிவால் கூறுகையில், '' டெல்லியில் கொரோனா தொற்று வேகம் குறைந்துள்ளது. இதனால் பொதுமக்கள் பயன் அடையும் வகையில் மெட்ரோ ரயிலேவையை சோதனை அடிப்படையில்  படிப்படியாக செயல்பட மத்திய அனுமதி அளிக்க வேண்டும். இதனை மத்திய அரசு புரிந்துகொள்ளும் என நம்புகிறேன்.

மார்ச் மாத இறுதியில் இருந்து மெட்ரோ சேவை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் மெட்ரோ நிர்வாகத்திற்கு ரூ.1,300 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. தொற்று பரவலை கட்டுக்குள் கொண்டுவந்ததில் குடியிருப்புவாசிகளின் பங்கு மிகப்பெரியது” என்றார். 

மேலும் செய்திகள்