அருணாச்சல பிரதேசத்தில் லேசான நிலநடுக்கம்
அருணாச்சல பிரதேசத்தில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.
இடாநகர்,
அருணாச்சல பிரதேசத்தின் தவாங் பகுதியில் இன்று காலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 7.30 மணியளவில் உணரப்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.4 ஆக பதிவானது.
நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக தகவல் இல்லை. மராட்டிய மாநிலத்தின் 24 மணி நேரத்தில் 3 முறை லேசான நில நிலடுக்கம் பதிவான நிலையில், இன்று காலை அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.