கேரளாவில் இன்று 7,871 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

கேரளாவில் இன்று 7,871 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2020-10-06 13:16 GMT
திருவனந்தபுரம்,

கேரள மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, கேரளாவில் இன்று 7,871 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கேரளாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 87,738 ஆக அதிகரித்துள்ளது.

இன்று தொற்று உறுதியானவர்களில் 111 பேர் சுகாதார பணியாளர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் இன்று 25 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். மேலும் இன்று ஒரே நாளில் 4,891 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக கேரள மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்