எதிர்க்கட்சிகள் சுயநலத்திற்காக அரசியல் நாடகங்களை நடத்துகின்றன- மாயாவதி குற்றச்சாட்டு

எதிர்க்கட்சிகள் சுயநலத்திற்காக அரசியல் நாடகங்களை நடத்துகின்றன என மாயாவதி குற்றம் சாட்டியுள்ளார்.

Update: 2020-10-09 10:56 GMT
லக்னோ,

எதிர்க்கட்சிகள் தங்கள் அரசியல் சுயநலத்திற்காக நிறைய அரசியல் நாடகங்களை நடத்தி வருவதாக, பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி குற்றம்சாட்டியுள்ளனர். உத்தரபிரதேசத்தில் தலித் பெண்ணை, பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட விவகாரத்தை கண்டித்து நாடு முழுவதும் எதிர்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. 

இந்த நிலையில் லக்னோவில் செய்தியாளர்களிடம் பேசிய மாயாவதி,  தலித் பிரிவு சகோதர சகோதரிகள் மீது ஏதேனும் துன்புறுத்தல் ஏற்பட்டால்,எதிர்க் கட்சிகள், அரசியல் நாடகம் நடத்தி, பயனடைவதாக குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும் செய்திகள்